இராஜாங்க அமைச்சர் டயனா கமகே குடிவரவு சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்திருந்தால், அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த பிடியாணை தேவையில்லை என கொழும்பு பிரதம நீதவான் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, இரண்டு பிறப்புச் சான்றிதழ்களை சமர்ப்பித்து இலங்கை கடவுச்சீட்டைப் பெற்றுள்ளார் என்பதற்கு போதிய சாட்சியங்கள் நீதிமன்றில் இருப்பதாக பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் மேலும் தெரிவித்தார்.