Thursday, June 19, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோட்டா நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கை செல்லுபடியற்றது

கோட்டா நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கை செல்லுபடியற்றது

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் ஆவணங்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பதில்லை என அமைச்சர்கள் சபை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டோர், குறித்த பரிந்துரைகளை செல்லுபடியற்றதாக உத்தரவு பிறப்பிக்குமாறு தாக்கல் செய்த மனுக்களை பரிசீலித்தபோதே சட்டமா அதிபர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இந்த மனுக்கள் நிஷங்க பந்துல கருணாரத்ன, டி. எம். சமரகோன் மற்றும் லஃபர் தாஹிர் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற பெஞ்ச் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles