Friday, June 26, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீச்சல் தடாகத்திலிருந்து கோடீஸ்வரரின் சடலம் மீட்பு

நீச்சல் தடாகத்திலிருந்து கோடீஸ்வரரின் சடலம் மீட்பு

பத்தரமுல்ல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றில் இருந்து கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹுவ பிரதேசத்தைச் சேர்ந்த ரொஷான் என்ற 50 வயதுடைய நபரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மூன்று நாட்களுக்கு முன் காணாமல் போயிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரின் சடலம் இன்று (02) பத்தரமுல்ல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அவரது வீட்டின் நீச்சல் தடாகத்தில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles