கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மருத்துவ உதவியாளர் ஒருவர் ஹெரோயினுடன் கட்டுநாயக்க பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவையைச் சேர்ந்த 38 வயதுடைய இவர், கட்டுநாயக்க, கோவின்னவில் உள்ள வீடொன்றை வாடகைக்கு எடுத்து தங்கி தேசிய வைத்தியசாலையில் பணிபுரிந்து வருவதாக தெரியவந்துள்ளது.
பெண்களுக்கான சிறிய அழகுசாதனப் பைகளில் ஹெரோயின் கவனமாக மறைத்து வைக்கப்பட்டு இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை காரில் வந்த நபருக்கு வழங்க முற்பட்ட போதே சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
