வாகனங்கள் மற்றும் விசேட தேவை உடையோர் பயன்படுத்துகின்ற பொருட்கள் என்பவை, சமுக பாதுகாப்பு அறவீட்டு வரி சட்டத்தின் கீழ் உற்பத்தி வரிக்கு உள்ளாகின்றன.
இந்தநிலையில் குறித்த வாகனங்கள் மற்றும் விசேட தேவை உடையோர் பயன்படுத்துகின்ற பொருட்களுக்கு இந்த வரியில் இருந்து விலக்களிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான யோசனையை அமைச்சரவையில் முன்வைத்தார்.