கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து கொஸ்கம நோக்கிப் பயணித்த ரயில், நேற்று மாலை 4 மணியளவில் கிருலப்பனை ரயில் நிலையத்தில் நிறுத்தாமல் செல்லப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த ரயிலை இயக்கிய சாரதியிடம் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.
ரயில்வே திணைக்களம் இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
ரயில் சாரதியின் இந்த செயலின் காரணமாக கிருலப்பனை ரயில் நிலையத்தில் இறங்க வேண்டிய பயணிகள் நுகேகொட நிலையத்தில் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சில பயணிகள் அங்கு அமைதியற்ற முறையில் செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.