10 மாத சிசுவை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அந்த குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி – கலேகான – நாகருக்காரம மாவத்தையைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெயின்டராக பணியாற்றும் சந்தேக நபர், மதுபோதையில் குழந்தையை வன்புணர்ந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குழந்தையின் தாய் சந்தேக நபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் அவருக்கு முதல் திருமணத்தில் 18 வயது குழந்தையொன்றும் இருப்பதாக தெரியவந்துள்ளது.
துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பத்து மாத சிறுமியின் தந்தை சந்தேக நபர் எனவும், குடித்துவிட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிசு, காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை சட்ட வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.