தான்சானியாவில் சுதந்திர தின விழா ரத்து செய்யப்பட்டு, விசேட தேவைகள் உள்ள குழந்தைகளின் வசதிக்காக தங்கும் விடுதிகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தான்சானியாவின் தேசிய சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9 அன்று கொண்டாடப்படுகிறது.
இருப்பினும், கடந்த டிசம்பரில் நடைபெற்ற தேசிய சுதந்திர தின விழாவை ரத்து செய்ய அந்நாட்டு தலைவர் முடிவு செய்தார்.
தான்சானியாவின் ஜனாதிபதி சாமியா சுஹுலு ஹாசன் இந்த தீர்மானத்தை மேற்கொண்டார்.
தான்சானியாவின் 61வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு மொத்தம் 445,000 டொலர்கள் செலவிடப்பட இருந்தது.
இந்நிலையில் சுதந்திர தின விழா ரத்து செய்யப்பட்டதால், நாடு முழுவதும் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் எட்டு தங்குமிடங்களைக் கட்டுவதற்கு இந்தப் பணம் ஒதுக்கப்பட்டது.
எனினும், தான்சானியா சுதந்திரக் கொண்டாட்டங்களை ரத்து செய்வது இது முதல் முறை அல்ல.
2015 ஆம் ஆண்டில். அப்போதைய ஜனாதிபதி ஜான் மகுஃபுலி கொண்டாட்டங்களை ரத்து செய்ததுடன், வணிகத் தலைநகரான டார் எஸ் சலாமில் சாலை அமைக்க நிதியை பயன்படுத்தினார்.
2020 இல், மருத்துவ வசதிகளை பெற குறித்த தொகையை பயன்படுத்த அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்து.