Friday, February 13, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதங்காலை சுற்றுலா விடுதியில் உயிரை மாயத்துக் கொண்ட இளம் தம்பதியினர்

தங்காலை சுற்றுலா விடுதியில் உயிரை மாயத்துக் கொண்ட இளம் தம்பதியினர்

தங்காலை – மெதகெட்டிய பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் இளம் தம்பதியொன்று நேற்று (22) இரவு அறையொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

17 வயதுடைய யுவதியும் 20 வயதுடைய இளைஞனும் இவ்வாறு தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞன் சுற்றுலா விடுதியின் பொறுப்பாளர் எனவும் யுவதி அம்பலாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் நேற்று மதியம் யுவதியின் வசிக்கும் பகுதிக்கு முச்சக்கர வண்டியில் சென்று சுற்றுலா விடுதிக்கு அவரை அழைத்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபரீத முடிவை எடுக்கும் முன் இருவரும் கடிதம் எழுதியிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles