Sunday, May 31, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபசுவை வன்புணர்ந்த இளைஞன் கைது

பசுவை வன்புணர்ந்த இளைஞன் கைது

கம்பஹா – வீரகுள – இஹல வீடியவத்தை காணியில் கட்டப்பட்டிருந்த பசுவுடன் உடலுறவில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 19 வயது இளைஞன் ஒருவர் வீரகுள பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கம்பஹா பதில் நீதவான் மகேஷ் ஹேரத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு ஜனவரி 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தை நேரில் பார்த்த காணி உரிமையாளரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

சந்தேக நபரை ராகம போதனா வைத்தியசாலையில் உள்ள மனநல மருத்துவரிடம் ஒப்படைத்து மருத்துவ அறிக்கையுடன் ஜனவரி 23 ஆம் திகதி ஆஜர்படுத்துமாறு மஹர சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles