நாளையதினம் (15) நாட்டில் மின்வெட்டு அமுலாக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய 3 நாட்களுக்கான மின்வெட்டு அட்டவணையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று வெளியிட்டிருந்தது.
தைப்பொங்கல் பண்டிகை தினத்திலும் மின்வெட்டு அமுலாக்கப்படுகின்றமை தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்தநிலையில் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நாளையதினம் மின்வெட்டு அமுலாக்கப்பட மாட்டாது என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் அறிவித்துள்ளார்.