75வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு 20 கோடி ரூபாவை ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ள 75ஆவது சுதந்திர தினத்திற்காக அரசாங்கம் 20 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன ‘தி மோர்னிங்’ பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், திறைசேரி இந்த பணத்தை ஒதுக்கியுள்ளதாகவும், செலவினங்களை முடிந்தவரை குறைத்து சுதந்திர தினத்தை கொண்டாட அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் செயலாளர் தெரிவித்தார்.