ரூபவாஹினி கூட்டுத்தாபனம் நவம்பர் மாதத்திற்கான மின்சார கட்டணத்தை செலுத்தாமையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
55 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நிலுவைத் தொகை செலுத்தப்படாததால் இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்பு நடவடிக்கைகள் ஜெனரேட்டர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்காக நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 3220 லீற்றர் டீசல் தேவைப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Lankadeepa