நாட்டில் தற்போது நிலவும் மருந்துப் பற்றாக்குறையை அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் முடிவுக்கு கொண்டு வர முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜே.எஸ்.சந்திரகுப்தா, மருந்துப் பொருட்கள் பற்றாக்குறைக்கு பல காரணங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.மருந்து தட்டுப்பாடுக்கு 3 வாரங்களுக்குள் தீர்வு