அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதுவரை இரண்டு மணித்தியாலங்களுக்குள் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களில் மின்வெட்டை பாரியளவில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மின் கட்டண திருத்தம் இன்றி தொடர்ச்சியான மின்சார விநியோகம் சாத்தியமில்லை.
எனவே, ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மின் கட்டணத்தை திருத்தியமைப்பது சிறந்தது என அமைச்சர் தெரிவித்தார்.