பிரித்தானிய வர்த்தக தூதுவர், டேவிஸ் ஒஃப் அபர்சோக் பிரபு (Lord Davies) 3 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கிலான கலந்துரையாடல்களில் இலங்கைக்கான பிரித்தானிய வர்த்தக தூதுவர் ஈடுபடவுள்ளார்.
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் 2020ஆம் ஆண்டு அவரை இலங்கைக்கான பிரித்தானியாவின் வர்த்தக தூதுவராக நியமித்தார்.
இந்தநிலையில் டேவிஸ் ஒஃப் அபர்சோக் பிரபுவின் வருகை புதிய வர்த்தக உடன்படிக்கைகளுக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
