Sunday, May 11, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅத்தியாவசிய கடனில் பொலிஸ் ஜீப்கள் இறக்குமதி?

அத்தியாவசிய கடனில் பொலிஸ் ஜீப்கள் இறக்குமதி?

அரசாங்கம் தொடர்பில் மக்களின் கருத்தை அறிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபர் ரஹ்மான் MP வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கம் முன்னெடுக்கும் அடக்குமுறை வேலைத்திட்டங்களுக்கு பதிலளிப்பதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை ஒத்திவைப்பதன் விளைவுகளை அரசாங்கம் எதிர்காலத்தில் அனுபவிக்க நேரிடும், என்றார்.

இதேவேளை, இந்திய கடன் திட்டங்களின் கீழ் பெறப்பட்ட கடன் பணத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு பதிலாக பொலிஸ் ஜீப்களை பெற்றுக் கொள்வதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாகவும் MP குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles