Thursday, December 18, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரட்டை குடியுரிமை தொடர்பான தீர்மானம்

இரட்டை குடியுரிமை தொடர்பான தீர்மானம்

22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர்கள் ஆகியுள்ளனர்.

எவ்வாறாயினும், இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும், இரட்டைக் குடியுரிமை தொடர்பான அறிவிப்புகளை நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் மாத்திரம் தான் வெளியிட முடியுமே தவிர வேறு முறைகளில் முடியாது எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இரட்டைக் குடியுரிமை இருப்பதாக தமக்குத் தெரியவந்துள்ளது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் இதனைத் தவிர்த்து எதனைப் பேருக்கு இரட்டை குடியுரிமை உள்ளது என்பது பற்றி தனக்குத் தெரியாது என குறிப்பிட்டுள்ளார் .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles