கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்தை கட்டுப்படுத்த தவறியதாக குற்றம்சாட்டப்பட்டு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகர்கள் 14 பேரும் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபர், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் விசேட விசாரணைப்பிரிவினர் ஆகியோர் தாக்கல் செய்யப்பட்டுள்ள தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் காரணமாக மக்கள் பிரதிநிதிகள் சிலரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் உயிரிழந்தார்.
இந்த நிலையில், குறித்த சம்பவங்களின் போது வன்முறையை தடுக்க முயலாத காரணத்தினால் கடந்த 20 ஆம் திகதி காவல் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் உள்ளிட்ட 20 பேர் தண்டனைக்குரிய பணிமாற்றம் செய்யப்பட்டனர்.
எனினும் இந்த இடமாற்றங்கள் அரசியல் இலாபம் கருதிய இடமாற்றங்கள் என மனுத்தாரர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளார்