Monday, July 14, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பிலும் 14 மணிநேர நீர்வெட்டு

கொழும்பிலும் 14 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (22) இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (23) மதியம் 12.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய புனரமைப்பு காரணமாக நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

அதற்கமைய, கொழும்பு 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய இடங்களில் நீர் விநியோகம் தடைப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும், போதுமான தண்ணீரை முன்கூட்டியே சேகரிக்குமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கோரியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles