முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த வாரம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஒரு வாரத்திற்கு 5 லீற்றர் போதாது என முச்சக்கரவண்டி சாரதிகள் மின்சக்தி அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கையை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் விலைச்சூத்திரம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும், தற்போது இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளதாகவும், அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.