கடும் மழை காரணமாக தியவன்னா ஓயாவின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதால், நாடாளுமன்ற வளாகம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் (15) தியவன்னா ஓயாவில் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நீர் செல்வதை தடுக்கும் வகையில் இலங்கை இராணுவம் மணல் மூட்டைகளை வைக்க ஆரம்பித்தது.
பாதுகாப்பு நடவடிக்கையாக நாடாளுமன்ற வளாகத்திற்கு கீழே அமைந்துள்ள குழு அறைகளின் அனைத்து நாற்காலிகள் மற்றும் மேசைகள் முதல் மாடிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.