ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் 2 மணியளவில் கட்சியின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுதந்திரக் கட்சியின் செயலாளர், தயாசிறி ஜயசேகர மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கு இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு கடிதம் அனுப்பியுள்ளார்.
எனினும், சிலர் இதனை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர்.
அண்மையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பு திருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
