ஊழியர் சேமலாப நிதியம் (EPF) பெறும் செயற்பாடுகளில் புதிய நடைமுறை ஒன்றை தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி 1958 என்ற இலக்கத்துக்கு அழைத்தோ அல்லது appointment.labourdept.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்தோ, தமக்கான நேரத்தை முற்கூட்டியே ஒதுக்கிக் கொள்ள முடியும்.
இதன்மூலம் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை என்று தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
செம்டம்பர் முதலாம் திகதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.