ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு வருடாந்தம் 18 முகாமையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களின் வேதனத்துக்காக 14 கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமான ஊழியர்களைக் கண்காணிக்க மேற்படி முகாமையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
மாதாந்தம் 5 இலட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறும் குறித்த முகாமையாளர்கள், பெரும்பாலான நிறுவனத்தின் உயர்மட்ட முகாமையாளர்களுக்கு மருந்துகள் மற்றும் ஏனைய தேவைகளை கொண்டு சேர்ப்பதில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.