Wednesday, April 15, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உயர்நீதிமன்றில் மனு

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உயர்நீதிமன்றில் மனு

காலிமுகத்திடல் போராட்டத்தின் செயற்பாட்டாளரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

தான் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு, இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். 

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உள்ளிட்டோருக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக  1640 அருட்தந்தை மற்றும் அருட்சகோதரிகள் நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

கத்தோலிக்க மதகுருமார்கள் கையொப்பமிட்ட இந்த கூட்டறிக்கையில், அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உள்ளிட்டோரை கைது செய்வதற்கான முயற்சிகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles