சர்வகட்சி அரசாங்கத்தில் மொட்டுக் கட்சியன் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம். சந்திரசேன, எஸ்.பி. திஸாநாயக்க, சி.பி. ரத்னாயக்க,ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரான வஜிர அபேவர்தனவுக்கு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.