செய்திகள்உள்நாட்டுசட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முயன்ற 50 பேர் சிக்கினர்

சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முயன்ற 50 பேர் சிக்கினர்

வென்னப்புவ – கொலின்ஜாடிய பகுதியில் சட்டவிரோதமாக படகு மூலம் பிரான்ஸுக்கு செல்ல முற்பட்ட சுமார் 50 பேரை பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

பேருந்து மற்றும் வேன் ஆகியவற்றின் ஊடாக குறித்த கடற்பகுதிக்கு சந்தேகநபர்கள் சென்றுக்கொண்டிருந்த போது, இன்று அதிகாலை பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் 6 பெண்களும், 4 சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

அவர்கள் சிலாபம், மாரவில, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles