Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலிலிருந்து டீசல் திருடிய நபர்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலிலிருந்து டீசல் திருடிய நபர்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் இருந்து டீசலை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் என்ஜினில் இருந்து குறித்த நபர் டீசலை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

சந்தேக நபர் சிலாபம் ரயில் நிலையத்தில் கடமையாற்றும் உதவி ரயில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் என்பதுடன், அவரிடம் இருந்து 15 லீட்டர் டீசலையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இன்று காலை கொழும்பு நோக்கிச் செல்லும் ரயில் என்ஜின் சிலாபம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது எரிபொருள் திருடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கைதான சந்தேக நபர் சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles