இதுவரை காலமும் தமது சேமிப்பை பயன்படுத்தியே வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், அதனை தொடர்ந்து முன்னெடுப்பது தற்போது கடினமாக உள்ளதாகவும் இலங்கை ஐக்கிய வர்த்தக மன்றம் தெரிவித்துள்ளது.
அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு பணம் அச்சடிக்கப்படுவதுடன், அப்போது தனியார் துறை ஊழியர்களுக்கு என்ன நடக்கும் என கேள்வி எழுப்பப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கு வேதனம் வழங்க பணம் அச்சடிக்க வேண்டுமாயின், அதற்கான உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.