Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாதீட்டிலும் பொய் - உண்மையை போட்டு உடைத்தார் மத்திய வங்கி ஆளுநர்

பாதீட்டிலும் பொய் – உண்மையை போட்டு உடைத்தார் மத்திய வங்கி ஆளுநர்

கடந்த பாதீடு தயாரிப்பின் போது உண்மைக்கு அப்பாற்பட்ட அரச வருமானத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பொது நிதி தொடர்பான குழுவிற்கு நேற்று (24) அழைக்கப்பட்ட போதே மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய இக்கட்டான பொருளாதார நிலைமையின் உண்மையான யதார்த்தத்தை மறைக்க வேண்டாம் எனவும் குறுகிய அரசியல் நலன்களை பொருட்படுத்தாமல் கட்சி பேதமின்றி நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக எடுக்கப்படும் கொள்கை முடிவுகளுக்கு ஆதரவளிக்குமாறும் அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்காலத்தில் எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்வதற்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்த உலக வங்கி இணங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles