அலரி மாளிகைக்கு முன்பு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அலரிமாளிகைக்கு முன்பாக பஸ் நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பஸ்கள் யாருடையது என போராட்டக்காரர்கள் நேற்று காவல்துறையினரிடம் வினவியுள்ளனர்.
அதன்போது, அவை யாருடையது என தெரியாததாக அவர்கள் பதிலளித்துள்ளனர்.
இந்நிலையில், அந்த பஸ்களை எடுத்துச் செல்ல காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று வருகை தந்துள்ளதால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.