Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநவம்பர் முதல் தேசிய அடையாள அட்டையில் மாற்றம்?

நவம்பர் முதல் தேசிய அடையாள அட்டையில் மாற்றம்?

இந்திய உதவியுடன் இலங்கையில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று (21) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் செயல்படும் டிஜிட்டல் அடையாளத் திட்டத்திற்காக இந்தியாவிடமிருந்து 8 மில்லியன் டொலர் உதவியை வழங்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

இது தொடர்பான உடன்படிக்கைக்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்நாட்டு மக்களுக்கு டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மரத்தில் ஏறிய நபர் மீது குளவிக்கொட்டு – கீழே வீழ்ந்து பரிதாபமாக பலி

தலவாக்கலை - மடக்கும்புர பகுதியில் மரமொன்றில் ஏறிய ஒருவர், குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் கீழே வீழ்ந்து உயிரிழந்தார். விறகு சேகரிப்பதற்காக மரமொன்றில் ஏறிய போது அவர் இந்த...

Keep exploring...

Related Articles