Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகப்ராலை பதவி விலக கோரினாரா ஜனாதிபதி?

கப்ராலை பதவி விலக கோரினாரா ஜனாதிபதி?

மத்திய வங்கியின் ஆளுநர் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ பணித்துள்ளதாக பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாவது,

IMF தூதுக்குழு, அதிகாரிகள் தொடர்பில் விவாதிக்கவில்லை என்பதுடன், மத்திய வங்கி ஆளுநர் கப்ராலும் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில் நிதி விவகாரங்கள் பற்றி மட்டுமே விவாதிக்கப்பட்டன.

இதுபோன்ற பொய்யான மற்றும் போலியான அறிக்கைகளால் மனம் தளராமல், நமது நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்காக தனது அனைத்து முக்கியப் பணிகளையும் தொடர்ந்து செய்யுமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் நான் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொள்கிறேன்.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles