களனி பல்கலையின் 4 மாணவர்கள் இடைநீக்கம்
களனி பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்கள் இடை நீக்கப்பட்டுள்ளனர்.பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கடத்தி, அவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தின் அடிப்படையிலேயே இந்த இடைநீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ஞாயிறு ஆராதனையில் பங்கேற்காத சிறுமியை தாக்கிய பங்குத் தந்தை
சாகவச்சேரியில் உள்ள தேவாலயத்தில் ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை எனப் பங்குத் தந்தை ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பங்குத்...
மகளை தாயாக்கிய நபருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் தனது மகளை தாயாக்கிய ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.நேற்று (04) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேற்படி...
மின்சாரத்தை துண்டிக்கச்சென்ற ஊழியர்கள் மீது தாக்குதல்
மின்சாரத்தை துண்டிக்கச்சென்ற மின்சார சபை ஊழியர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் கம்பஹாவில் பதிவாகியுள்ளது.தாக்குதலுக்கு இலக்கான இரு ஊழியர்களும் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.மின்...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 77,487...
2,600 கிராம உத்தியோகத்தர்கள் சேவைக்கு
புதிதாக 2600 கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.இதற்கான பரீட்சை நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.அதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம்...
மீள கையளிக்கப்பட்ட தொல்பொருட்கள் மக்கள் பார்வைக்கு
ஒல்லாந்தர் ஆட்சிகாலத்தின் போது இலங்கையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு மீள கையளிக்கப்பட்ட சில தொல்பொருட்கள் இன்று முதல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளன.1756 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிகாலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட குறித்த...
நுவரெலியா இபோச ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது
நுவரெலியா இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளமையால் நேற்று காலை முதல் மேற்க்கொள்ளப்பட்டு வந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் மூவர் ஞாயிற்றுக்கிழமை...
தெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவம்: விசாரணைகள் ஆரம்பம்
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன்தொடர்புடைய குழுவினரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.குறித்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி காணொளிகளை அடிப்படையாக கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர்களை...
நாடு திரும்பினார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (04) இரவு நாடு திரும்பினார்.டுபாயில் நடைபெற்ற 'காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில்' பங்கேற்பதற்காக அவர் கடந்த 30ஆம் திகதி சென்றிருந்தார்.டுபாயில் இருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் நுமு 648...
Popular
