Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளி மாவட்டங்களுக்கு எரிவாயு விநியோகம் ஆரம்பம்

வெளி மாவட்டங்களுக்கு எரிவாயு விநியோகம் ஆரம்பம்

கொழும்புக்கு அப்பால் ஏனைய மாவட்டங்களுக்கு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (13) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த தினங்களில் கொழும்பு மாவட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வந்தன.

இதன் போது பெருமளவான மக்கள் வரிசையில் நின்று எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களுக்கும் நாளாந்தம் 50,000 சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேநேரம் LITRO நிறுவனத்துக்கு சொந்தமான 3700MT எரிவாயு அடங்கிய கப்பல் நேற்று கொழும்பை வந்தடைந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles