கொழும்புக்கு அப்பால் ஏனைய மாவட்டங்களுக்கு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (13) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த தினங்களில் கொழும்பு மாவட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வந்தன.
இதன் போது பெருமளவான மக்கள் வரிசையில் நின்று எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களுக்கும் நாளாந்தம் 50,000 சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதேநேரம் LITRO நிறுவனத்துக்கு சொந்தமான 3700MT எரிவாயு அடங்கிய கப்பல் நேற்று கொழும்பை வந்தடைந்தது.