இந்தியாவின் ராஜ்யசபா எம்.பி.யும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.
‘கோட்டாபய மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இருவரும் சுதந்திரமான தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தகைய சட்டபூர்வமான தேர்தலை ஒரு கும்பல் கவிழ்க்க இந்தியா எப்படி அனுமதிக்கும்? அப்போது நமது சுற்றுப்புறத்தில் உள்ள எந்த ஒரு ஜனநாயக நாடும் பாதுகாப்பாக இருக்காது. ராஜபக்ஷ கோரினால் இந்தியாவின் இராணுவ உதவியை நாம் வழங்க வேண்டும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.