நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான புதிய சட்டத்தை உருவாக்குவதற்கு வரைவு தயாரிப்பாளருக்கு அறிவுறுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தனது பிரேரணையை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு என்பது இலங்கை சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்படாத காரணத்தினால், தற்போது அவ்வாறான வழக்குகளை விசாரித்து முடிவெடுப்பதற்கு தெளிவான மற்றும் சீரான நடைமுறை இல்லை.
இந்த புதிய சட்டத்தின் அறிமுகமானது நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தையும், நீதி நிர்வாகத்தில் தலையிடும் வரம்புகள் மற்றும் கருத்து சுதந்திரத்தின் வரம்புகளையும் வரையறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.