Sunday, June 8, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசலுகை வாகன அனுமதிப்பத்திரம் மூலம் அரசுக்கு 94 பில்லியன் ரூபா இழப்பு

சலுகை வாகன அனுமதிப்பத்திரம் மூலம் அரசுக்கு 94 பில்லியன் ரூபா இழப்பு

சலுகை முறையிலான வாகன அனுமதிப்பத்திரம் ஊடாக வருடமொன்றில் இலங்கை சுமார் 94 பில்லியன் ரூபா வருமானத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து மற்றும் விநியோக முகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அமல் குமாரகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

குறித்த தொகையானது வாகன இறக்குமதி வரியின் ஊடாக அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெறும் வருமானத்திற்கு இணையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அரசாங்கத்தின் வாகன வரிவிதிப்புக் கொள்கை கேலிக்குரிய விடயமாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை வருடமொன்றுக்கு 10 ஆயிரம் வரையிலான சலுகை வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்குகிறது.

அவற்றில் பெரும்பாலானவை சொகுசு அல்லது அதிக இயந்திர திறன் கொண்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

இதன் காரணமாக அரசாங்கத்திற்கு வருடமொன்றுக்கு சுமார் 94 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles