இந்திய கடன் எல்லை வசதியின் கீழ் ஓமானில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட உள்ள யூரியா உரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் விவசாயிகளுக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகசந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக அரிசியை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு அதனை விற்பனை செய்வதற்கான வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.