Monday, May 26, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழ் - இந்தியாவுக்கான விமான கட்டணங்கள் சடுதியாக அதிகரிப்பு

யாழ் – இந்தியாவுக்கான விமான கட்டணங்கள் சடுதியாக அதிகரிப்பு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜுலை மாதம் முதலாம் திகதி மீளவும் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான விமான சேவைக்காக அறிவிக்கப்பட்டுள்ள கட்டணத்தை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என யாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணம் – திருச்சிக்கு இடையான ஒருவழி பயணத்திற்கான விமான கட்டணம் 40,000 ரூபாவாக காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை – யாழ்ப்பாணம் இடையே ஒருவழி பயணத்துக்கான கட்டணம் 50,000 ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமானக் கட்டணங்களின் அதிகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், பயணிகளுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் யாழ்ப்பாண மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விமான பயணங்களுக்கான பயணச்சீட்டுகள் இம்மாதம் 21ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளன.

கொவிட் பரவல் காரணமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்படும் முன்னர், யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான கட்டணம் 26,000 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles