Sunday, May 25, 2025
28.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகருப்பு பணத்தை வெள்ளையாக்க முயன்ற நால்வர் கைது

கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயன்ற நால்வர் கைது

ஒரு கோடியே 86 இலட்சத்து 95 ஆயிரம் ரூபா உள்நாட்டு பணத்தையும், 4 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டுப் பணத்தையும் வைத்திருந்த நான்கு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புறக்கோட்டை உள்ளிட்ட 3 இடங்களில் வைத்து, பொலிஸ் விசேட அதிரப் படையினரால் நேற்று இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புறக்கோட்டை – டெனெட் சந்தைக் கட்டடத் தொகுதி, மாளிகாவத்தை – நூரானியா சந்தி, கொழும்பு 10 முதலான இடங்களில் உள்ள 3 தங்க ஆபரண விற்பனை நிலையங்களை சோதனைக்கு உட்படுத்தியபோது, குறித்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள், வெள்ளவத்தை, மருதானை மற்றும் புதுக்கடை முதலான பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles