பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில்இ தேநீர் மற்றும் பால் தேநீர் அருந்துவதைக் குறைக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
பொருளாதார நெருக்கடியால், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு வேகமாகக் குறையத் தொடங்கியுள்ளதால், இறக்குமதி செலவினங்களைக் குறைக்க வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய தேயிலை இறக்குமதியாளராக பாகிஸ்தான் உள்ளது.
2021 ஆம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் அரசாங்கம் தேயிலையை வாங்க 600 மில்லியன் டொலருக்கு அதிகமாக செலவிட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.