அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தமையால் தற்போதைய நெருக்கடிக்கு பொதுமக்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பதவி விலகுவதை அறிவிப்பதற்காக நடத்தப்பட்ட விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன், அதிகாரத்தை அரசாங்கத்திடம் கையளித்தமைக்கு வாக்களித்த மக்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
தான் ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் ஆற்றிய பணி குறித்து தனக்கு வருத்தம் இல்லை எனவும், அதே சமயம் தலையாட்டுவதை விட இறுதியான அமைப்பு மாற்றத்தை தான் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறினார்.