இலங்கையுடனான தனது விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ரஷ்ய தூதுவருக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் புட்டினுக்கு அனுப்பப்பட்ட கடிதம் இலங்கையிலுள்ள ரஷ்ய தூதரகத்தினால் அவருக்கு அனுப்பிவைக்கப்பட்டதையும் இதன்போது உறுதிப்படுத்தியுள்ளார்.
விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க ரஷ்யா தயாராக இருப்பதாகவும், அது இலங்கை அரசாங்கத்தால் சான்றளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளதாக மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.