ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இந்த வார இறுதியில் அமெரிக்கா செல்லவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி நாளை (09) பசில் ராஜபக்ஷ தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதவி விலகிய பின்னர், அவர் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி நிலைமையை விளக்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வார இறுதியில் பசில் ராஜபக்ஷ குறுகிய காலத்திற்கு அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், மீண்டும் இலங்கைக்கு திரும்பிய பின்னர் பொதுஜன பெரமுன கட்சியை மறுசீரமைப்பதில் முழுநேரமாக பணியாற்ற தீர்மானித்துள்ளார்.