தற்போதைய நெருக்கடி நிலையில் ரயில்வே திணைக்களத்திற்கு வருடாந்தம் ஏற்படும் நட்டம் 15 பில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் மாத்திரம் பல சந்தர்ப்பங்களில் எரிபொருள் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் அதற்கு நிகராக ரயில் பயணக் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என ரயில்வே திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பேருந்து பயணக் கட்டணத்துடன் ஒப்பிடுகையில் நான்கில் ஒரு பங்கை விடவும் குறைவான கட்டணமே ரயிலுக்கு அறவிடப்படுவதாக அவர் தெரிவித்தார்.