இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் சமீபத்திய வரி உயர்வு காரணமாக ஸ்மார்ட் கைப்பேசியின் குறைந்தபட்ச விலை 80,000-90,000 ரூபாவாக ஆக அதிகரிக்கக்கூடும் என கைப்பேசி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வருடம் 20,000 ரூபாவாக இருந்த ஸ்மார்ட்போனின் விலை தற்போது 50,000 ரூபாவை தாண்டியுள்ளது.
கையடக்கத் தொலைபேசிகளின் உதிரி பாகங்கள் மற்றும் ஏனைய பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
இதனால் பல கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.