எதிர்வரும் நாட்களில் டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் தீவிரமடைந்து தொற்று நோயாக மாறும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் உள்ள சீரற்ற காலநிலையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக கீழ் மட்ட தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால் டெங்கு காய்ச்சல் பாரிய தொற்றுநோயாக பரவுவதற்கான ஆபத்துகள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், மருத்துவமனைகளில் மருந்து மற்றும் உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, நாடு பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.