நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாட்டுப்புற உணவுகளை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பலாக்காய், ஈரப்பலா, வற்றாளைக் கிழங்கு என்பவற்றை வழங்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் நாடாளுமன்றம் கூடும் நாட்களில் நாட்டுப்புற உணவு வகைகளும் நாடாளுமன்ற உணவகம் மூலமாக வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.